×

2018-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் முடித்து வைப்பு 42% அதிகரித்துள்ளது: சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்

சென்னை: 11 குற்றவியல் நீதிமன்றங்களை உருவாக்கவும், 51 சிறு குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களை உருவாக்கவும் முயற்சி நடைபெறுவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இதனை தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் முடித்து வைப்பு 42% அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு ஆண்டுகளில் 100% நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கும் என்று சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivam Shanmugam , 2018,criminal cases,solved,Law Minister,CV Shanmugam
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...